தமிழ்நாடு நாராயணசாமி விவசாயிகள் சங்கம் பாஜவுக்கு ஆதரவு

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாஜவுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு நாராயணசாமி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி.. ஏப்ரல்..01 தமிழ்நாடு நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.. மாநில தலைவர் AS பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அச்சங்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.. கூட்டத்துக்கு பின்னர் கட்சியின் தலைவர் ஏ எஸ் பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் தென்னை விவசாயிகள் அதிக அளவில் உள்ளன கடுமையான வறட்சி தென்னை மரங்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன தேங்காய்விலை வீழ்ச்சி கொப்பரை விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்..

மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற ஒரு சில பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளது அதை நீக்க வேண்டும் குறிப்பாக தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் அரசு இலவசமாக மின்சாரம் வழங்குவதற்கு பதிலாக இலவசமாக வாய்க்கால் வெட்டித் தர வேண்டும் தென்னக நதிநீர் இணைப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும் இதற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதால் இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் பாஜக வெற்றி பெற விவசாயிகள் சங்கம் சார்பில் பாடுபடுவோம் என தெரிவித்தனர்..


Tags

Next Story