அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என ஆட்சியர் தெரிவித்தார். .
அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ஆட்சியர் தகவல். தமிழக முழுவதும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வு எழுதிய +2 மாணாக்கர்களுக்கு மே 6 ஆம் தேதி முடிவுகள் வெளியானது. இதனைத் தொடர்ந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, அன்றைய தினம் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டதன் பேரில், தேர்ச்சி அடைந்த மாணாக்கர்கள் ஆன்லைனில் தங்கள் படிப்பை தேர்வு செய்து விண்ணப்பம் செய்தனர். அவ்வாறு விண்ணப்பம் செய்வதற்கு இன்று இறுதி நாள். எனவே பிளஸ் 2வில் தேர்ச்சி அடைந்த மாணாக்கர்கள், எவரேனும் இதுவரை விண்ணப்பம் செய்யாமல் இருந்தால் உடனடியாக இன்று மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

Tags

Next Story