கவி அருவியில் காட்டாற்று வெள்ளம்-சுற்றுலா பயணிகளுக்கு தடை

கவி அருவியில் காட்டாற்று வெள்ளம்-சுற்றுலா பயணிகளுக்கு தடை

கவி அருவியில் காட்டாற்று வெள்ளத்தால் சுற்றுலா பயணிகளுக்கு தடை

தொடர் கனமழையால் அருவிகளில் நீர் வரத்து அதிக அளவில் உள்ளது
பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆழியார் கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் நலம் கருதி கவியருவி மூடப்பட்டுள்ளது.அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கவி அருவி மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Tags

Next Story