குடிபோதையில் வியாபாரி மீது தாக்குதல் - பஞ்சாயத்து தலைவரின் கணவர் கைது.

குடிபோதையில் வியாபாரி மீது தாக்குதல் - பஞ்சாயத்து தலைவரின் கணவர் கைது.

பைசல் 

பொள்ளாச்சி,ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் இளையராஜா.இவர் தனக்கு சொந்தமான வாகனத்தில் வைக்கோல் வியாபாரம் செய்து வருகிறார்.இளையராஜா அம்பராம்பாளையம் ஆல்வா மருத்துவமனை எதிரில் உள்ள சத்யசீலன் என்பவரின் காலி இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.அப்போது அங்கு குடிபோதையில் வந்த அம்பராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சஹர் பானுவின் கணவர் பைசல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளையராஜாவின் வாகனத்தின் சக்கரங்களில் உள்ள காற்றை பிடுங்கி உள்ளார்.இதனை தட்டி கேட்ட இளையராஜாவை கண்மூடித்தனமாக அடித்து பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளார்.மேலும் இளையராஜாவின் நெஞ்சை கடித்து காயத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் இளையராஜாவை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து இளையராஜா ஆனைமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அம்பராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பைசலை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்

Tags

Next Story