கார் மோதி மின்கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கார் மோதி மின்கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மரத்தில் மோதிய கார்


மயிலாடுதுறையில் கார் மோதிய விபத்தால் சாலையில் சாய்ந்த மின்கம்பத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் கருங்குயில் நாதன் பேட்டை என்ற இடத்தில் மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது . இதனால் மின் கம்பம் முறிந்து விழுந்து சாலையை அடைத்துக் கொண்டது.

உடனடியாக மின்வாரத் துறையினர் சென்று மின்சாரத்தை நிறுத்தி முறிந்து கிடந்த மின் கம்பம் மற்றும் கம்பிகளை அப்புறப்படுத்தினர் இதனால் அப்பகுதியில் 1மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் உயிர் சேதம் இல்லை. மின்கம்பத்திற்கு சேதம் ஏற்படுத்திய வாகனம் மீது மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags

Next Story