மொழிப் போர் தியாகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவுத்தூனுக்கு மரியாதை

மொழிப் போர் தியாகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவுத்தூனுக்கு மரியாதை

மொழி போர் தியாகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவுத்தூனுக்கு மரியாதை

மொழிப்போர் தியாகி மயிலாடுதுறை சாரங்கபாணியின் நினைவுத்தூணுக்கு அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965-இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீ வைத்து கொண்டு உயிர் நீத்தார்.

அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, மயிலாடுதுறை அடுத்துள்ள மன்னம்பந்தலில் எழுப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபிக்கு மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் திமுக, அதிமுக, அமமுக, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் தேசிய முன்னணி தமிழ் மண் தன்னுரிமை இயக்கம், வினர் மற்றும் தமிழ்சங்கத்தினர் மலர்வளையம் வைத்து மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மத்திய அரசின் மொழிக் கொள்கை எதிராகவும் செத்துப்போன சமஸ்கிருதத்திற்கு ரூபாய் ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசை கண்டித்தும் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்காததை எதிர்த்து கன்டன முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story