கரூரில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

கரூரில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
எம்ஜிஆர் சிலை மரியாதை
கரூரில் பஎம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை. தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கட்சியின் நிறுவன தலைவருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்தநாள் இன்று

. தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள எம் ஜிஆர் ரசிகர்கள் இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையில், கரூர் மாவட்டம்,கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு, கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான எம் ஆர் விஜயபாஸ்கர் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதை தொடர்ந்து அருகில் அமைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், மாவட்டம் முழுவதும் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகளின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.

Tags

Next Story