அமராவதி ஆற்றுப்படுகையில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது.

அமராவதி ஆற்றுப்படுகையில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது.

சூதாட்டம் 

கரூர் மாவட்டம், க. பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, விஸ்வநாதபுரி பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுப்படுகையில் பணம் வைத்து சூதாடுவதாக மகளிர் காவல் உதவி ஆய்வாளர் தில்லைகரசிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, விஸ்வநாதபுரி தெற்கு தெருவை சேர்ந்த சரவணன் மற்றும் செல்வராசு ஆகிய இருவரும் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டு, இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் பணம் வைத்தது சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 150-ம் பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Tags

Next Story