பூங்கா நகரில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

பூங்கா நகரில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

கோப்பு படம் 

பூங்கா நகரில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூங்கா நகரில் பணம் வைத்து சூதாடிய இருவர் கைது. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பூங்கா நகர் பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவதாக காவல் உதவி ஆய்வாளர் அழகுராமுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் ஜனவரி 20ஆம் தேதி மாலை 4 மணியளவில் பூங்கா நகர் பகுதியில் ரோந்து ஈடுபட்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள மைதானத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட, தாந்தோணி மலை முருகன் நகர் இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், சபரி முடி தெருவை சேர்ந்த குணசேகரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.200-யும் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த தாந்தோணி மலை காவல்துறையினர் பின்னர் அவர்களை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர்.

Tags

Next Story