பாக்கெட்டில் இருந்த பணத்தை களவாடிய இருவர் கைது !

பாக்கெட்டில் இருந்த பணத்தை களவாடிய இருவர் கைது !

இருவர் கைது

பயணியிடம் பாக்கெட்டில் இருந்த பணத்தை களவாடிய இருவர் கைது செய்யப்பட்டார்.
பஸ்ஸில் ஏறிய பயணியிடம் பாக்கெட்டில் இருந்த பணத்தை களவாடிய இருவர் கைது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, போத்ராவுத்தன்பட்டி அருகே உள்ள கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணிய மகன் வடிவேல் வயது 25. இவர் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 8 மணி அளவில், கரூர் பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முயன்ற போது, அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூபாய் ஆயிரத்தை களவாடி உள்ளனர். களவாடிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரித்த போது, திண்டுக்கல் மாவட்டம், மலைக்கோட்டை அடிவாரம், அங்குவிலாஸ் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முருகேசன் வயது 55 மற்றும் திண்டுக்கல் மாவட்டம், கேது காட்டன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த முருகன் வயது 51 என தெரிய வந்தது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி,சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர். மேலும் பிடிபட்ட இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story