கடை வீதியில் அரிவாளைக் காட்டி மிரட்டி பயமுறுத்திய இருவர் கைது

கடை வீதியில் அரிவாளைக் காட்டி மிரட்டி பயமுறுத்திய இருவர் கைது

கைது

மயிலாடுதுறை சீனிவாசபுரம் கடைவீதியில் அரிவாளைக் காட்டி பொது மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்த இருவரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் சுப்ரியா சம்பவ தினத்தன்று மாலை சீனிவாசபுரம் பகுதியில் நோன்பு சென்றபோது அங்கே ஒரு பேக்கரி கடை முன்பு இரண்டு பேர் கையில் அரிவாளுடன் வருவோர் போவோரை வழிமறித்தும் அவர்களை திட்டிக்கொண்டும் இருந்தனர், அப்பகுதியில் சென்ற மக்கள் பயந்து ஓடினர் இதுக்கண்ட காவல் ஆய்வாளர் சுப்ரியா மற்றும் போலீசார் அவர்கள்இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் குற்ற பின்னணி உள்ள மேலப்பட்ட மங்கலம் நல்லதம்பி மகன் பாலகிருஷ்ணன்( 25 )என்பதும் மற்றொரு நபர் திருஇந்தளூர் கவரத்தெரு ராகவன் மகன் சந்தோஷ்குமார் (21) என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்து பொதுமக்களை திட்டுதல், அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தல் ஆயுத தடைச் சட்டம் ப என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து காவலில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story