டூவீலர் விபத்து - முதியவர் படுகாயம் !

டூவீலர் விபத்து - முதியவர் படுகாயம் !

 காவல்துறை

டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து. முதியவர் படுகாயம் அடைந்தார்.
டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரிக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி வயது 58. இவர் மார்ச் 26 ஆம் தேதி இரவு ஏழேகால் மணியளவில், கரூர் டு ஈசநத்தம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது டூவீலர் ராயனூர் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குப்புசாமிக்கு தலை, முன் நெற்றி,வலது கண், இரண்டு கைகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த குப்புசாமி மகன் கௌதம் வயது 30 என்பவர்,இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய குப்புசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags

Next Story