கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

விபத்து 

கரூர் மாவட்டம்,வெங்கமேடு பகுதியில் கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு, அரசி நகர் அருகே உள்ள திட்டசாலை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது 37. இவர் மே 5-ம் தேதி காலை 8:30- மணி அளவில், அருகிலுள்ள சின்ன குளத்து பாளையம் பகுதியில் கண்ணன் டீ ஸ்டால் அருகே தனது ஹோண்டா i10 காரை நிறுத்தி இருந்தார். அப்போது, வெங்கமேடு, காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாஷ் வயது 18 என்ற இளைஞர் டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென தங்கராஜ் தனது காரின் கதவை திறந்து உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராதால், சிவப்பிரகாஷ் டூ வீலர் கார் கதவின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவப்பிரகாசுக்கு இடது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள நாதன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவப்பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், திடீரென காரைத் திறந்ததால், விபத்து ஏற்பட காரணமான தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story