டூவீலர்கள் மோதல்- நான்கு பேர் படுகாயம்

டூவீலர்கள் மோதல்- நான்கு பேர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
அருகம்பாளையம் அருகே டூவீலர்கள் மோதல்- நான்கு பேர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. ஈரோடு மாவட்டம் கருமண்டம் பாளையம் அருகில் உள்ள கீரைமடை பகுதியைச் சேர்ந்தவர் பிரதிப் 26. இவரது நண்பர் ஈரோடு, இரணியன் தெருவை சேர்ந்த ரமேஷ் வயது 24. மற்றொரு நண்பர் கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, வாளையாபாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்த் வயது 29. இவர்கள் 3 பேரும் ஜனவரி 30 ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில், கரூர்- ஈசநத்தம் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். டூ வீலரை பிரதீப் ஓட்டி சென்றார். இவர்களது வாகனம் அருகம்பாளையம் மாஸ் பஸ்பாடி கோச் அருகே சென்று கொண்டிருந்தபோது, திண்டுக்கல் மாவட்டம் சேர்வைக்காரன் பட்டி, நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் வயது 47 என்பவர் அதே சாலையில், டூவீலரில் சென்றவர், எதிர்பாராத நேரத்தில் பிரதீப் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலரில் சென்ற அனைவருமே படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள நாதன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூரை சேர்ந்த அரவிந்த் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண. மேற் கொண்ட தாந்தோணிமலை காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய, செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags

Next Story