செம்மடை அருகே டூவீலர்கள் மோதல்;ஒருவர் படுகாயம்.

செம்மடை அருகே டூவீலர்கள் மோதி உண்டான விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

செம்மடை அருகே டூவீலர்கள் மோதல். ஒருவர் படுகாயம். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் தனபால் வயது 30. இவர் டிசம்பர் 12ஆம் தேதி காலை 11- மணியளவில், கரூர்- சேலம் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் செம்மடை, புதிய பாலம், சர்வீஸ் ரோடு அருகே சென்றபோது, சேலம் மாவட்டம், வெள்ளாளப்பட்டி, கருப்பூர் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் வயது 23 என்பவர், அவரது டூவீலரில் வேகமாக சென்று, தனபால் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த தனபாலுக்கு, வலது கால், வலது கண், வலது தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தனபால் அளித்த புகாரின் பேரில், வாங்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய, நவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story