டூவீலர்கள் மோதல், ஒருவர் உயிரிழப்பு

கரூரில் இரண்டு டூவீலர்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மாவடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் பிரபாகரன் வயது 48. இவர் மே 6ஆம் தேதி இரவு 9:30- மணி அளவில், நெரூரிலிருந்து அரசு காலணி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் பஞ்சமாதேவி அருகே காளிபாளையம் பகுதியில் செல்லும் போது, அதே சாலையில், கரூர் அடுத்த வாங்கல், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் திலீப் குமார் வயது 25 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், பிரபாகரன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த பிரபாகரனுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் அறிந்த பிரபாகரனின் மனைவி ராதா வயது 49 என்பவர், இதுகுறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பிரபாகரனின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக, வேகமாக டூவீலரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய திலீப்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story