முத்துநகர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்

பசுபதிபாளையம், முத்துநகர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, சணப்பிரட்டி, பறையூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் வயது 54. இவர் மார்ச் 17ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில் இ.பி. காலனியிலிருந்து இருந்து டெல்லி ஸ்வீட் செல்லும் சாலையில் தனது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் பசுபதிபாளையம், முத்துநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று, முருகேசன் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது.

திடீரென ஏற்பட்ட இந்த சம்பவத்தால், நிலைகுலைந்து வாகனத்துடன் கீழே விழுந்த முருகேசனுக்கு, பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் .

மேலும் மோதிவிட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்ற வாகனம், ஓட்டிய நபர் யார் என அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடையாளம் காண திட்டமிட்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story