உதயநிதி வேண்டுகோள் - நிறைவேற்றிய திமுகவினர்

உதயநிதி வேண்டுகோள் - நிறைவேற்றிய திமுகவினர்

பரிசளிப்பு 

மயிலாடுதுறையில் நடந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்திறன் போட்டி நிகழ்ச்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டதை போல தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.
மயிலாடுதுறையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதை மற்றும் திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி திமுக மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமையில் நடைபெற்றது. 95 மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய இப்போட்டியின் முடிவில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேரவையின் மாநில செயலாளர் திருவிடம் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 ரொக்கப்பரிசினை வழங்கினார். சிறப்பான பேச்சினை வெளிப்படுத்திய மாணவிகள் சிலர் மேடையிலேயே குரலில் ஏற்ற இறக்கங்களுடன் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். வெற்றிபெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். முன்னதாக, நேற்றைய நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டதைப் போன்றே இந்த திமுக நிகழ்ச்சியானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story