போட்டோ பாயின்ட் அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு

போட்டோ பாயின்ட் அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு

போட்டோ பாயின்ட்

மயிலாடுதுறையில் போட்டோ பாயின்ட் அமைத்து வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

பெரிய எதிர்பார்ப்புடன் துவங்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையிலும், வாக்காளர்கள் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போட்டோ பாயின்ட் அமைத்து வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த போட்டோ பாயிண்ட்டை மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி தொடங்கி வைத்து, போட்டோ எடுத்து கொண்டனர்.

"தேர்தல் பருவம் தேசத்தின் பெருமை", "அனைவரும் வாக்களிப்போம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்போம்" என்ற தலைப்பில் போட்டோ பாயிண்ட் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் ஏராளமான அரசு அதிகாரிகள் கடந்து கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story