இரண்டு தினங்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்

இரண்டு தினங்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தம்

மயிலாடுதுறையில் 36 வார்டுகளுக்கும் 21 மற்றும் 22ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மயிலாடுதுறையில் 36 வார்டுகளுக்கும் 21 மற்றும் 22ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை நகராட்சிக்கு முடிகணடநல்லூல் பகுதி கொள்ளிடம் ஆற்றிலிருந்து நீரேற்று நிலையம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது . மயிலாடுதுறை நகராட்சிக்கு கொண்டுவரப்படும் பைப் லைனில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கின்றனர். வருகிற 21ஆம் தேதி வியாழன் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கும் மயிலாடுதுறை நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளை நிறுத்தப்படுவதாக மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story