பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் : திறந்து வைத்த செந்தில்நாதன்

கரூர் மாவட்ட பாஜக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் திறந்து வைத்தார்.

கரூர் மாவட்ட பிஜேபி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு. கோடை காலம் துவங்கியதிலிருந்து முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்திலேயே அதிகப்படியாக கரூர் மாவட்டத்தில் 112 டிகிரி வரை வெயிலடித்து அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கரூர்- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு முன்பு, நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, இன்று மாவட்ட தலைவர் செந்தில்நாதன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், நீர் மற்றும் மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நீர், மோர் பந்தல் திறப்பு விழாவை சிறப்பித்தனர்

Tags

Read MoreRead Less
Next Story