குத்துச்சண்டையில் தங்கம் வென்ற நரிக்குறவர் சமுதாய மாணவருக்கு வரவேற்பு

குத்துச்சண்டையில் தங்கம் வென்ற நரிக்குறவர் சமுதாய மாணவருக்கு வரவேற்பு

மாணவருக்கு வரவேற்பு 

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்  மயிலாடுதுறையை  நரிக்குறவர் சமுதாய மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, அரியானா, இமாச்சல் பிரதேஷ், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர்.

இதில், 13-ஆம் தேதி நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் வீரசிவாஜி என்ற மாணவர் கலந்துகொண்டு இறுதிப்போட்டியில் பஞ்சாப் வீரரை எதிர்கொண்டு மோதி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய வீரசிவாஜிக்கு,

பல்லவராயன்பேட்டை கிராமத்தில் அச்சமுதாய மக்கள் நூற்றுக்கணக்கானோர் சாலையில் திரண்டு, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், வெற்றி பெற்ற மாணவனை சாலையில் இருந்து வீடு வரை தங்கள் தோளில் சுமந்துசென்று கொண்டாடினர்

Tags

Next Story