கொலை மிரட்டல் விடுத்ததாக கணவன் மீது மனைவி புகார்

கொலை மிரட்டல் விடுத்ததாக கணவன் மீது மனைவி புகார்

குழந்தையில்லாததால் கருத்து வேறுபாடு காரணமாக தற்காலிகமாக கணவரை பிரிந்த நிலையில் கொலைமிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் அக்களூரை சேர்ந்த திவ்யா புகார் அளித்துள்ளார்.

குழந்தையில்லாததால் கருத்து வேறுபாடு காரணமாக தற்காலிகமாக கணவரை பிரிந்த நிலையில் கொலைமிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் அக்களூரை சேர்ந்த திவ்யா புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை அக்களூர் பகுதியை சேர்ந்த திவ்ய பிரியா மற்றும் சண்முகம் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இரண்டு ஆண்டு ஆகியும் குழந்தை இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சம்பவ தினத்தன்று சண்முகம் நிறைந்த போதையில் திவ்யபிரியா வீட்டுக்கு சென்று அவரை திட்டி அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து திவ்ய பிரியா அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை தேடி வருகின்றனர்‌.

Tags

Next Story