போதிய வருமானம் இல்லாத விரக்தியில் பெண் தற்கொலை

போதிய வருமானம் இல்லாத விரக்தியில் பெண் தற்கொலை
X

காவல் நிலையம் 

கரூர் அருகே போதிய குடும்ப வருமானம் இல்லாத விரக்தியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கும்பகோணம், மாதா கோவில் தெரு, பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜவகர் மனைவி வனிதா வயது 41. இவர் சமீபகாலமாக கரூர் சின்னாண்டாங் கோவில், ராசிநகர் பகுதியில் வசித்து வந்தார். வனிதா- ஜவகர் திருமணம் நடைபெற்று, இவர்களுக்கு இரண்டு மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். குடும்பத் தகராறில் கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார் வனிதா. அண்மைக்காலமாக குடும்ப வருவாய் போதிய அளவு இல்லாததால், விரக்தியுடன் வாழ்ந்து வந்த வனிதா, பிப்ரவரி 13ஆம் தேதி காலை 9 மணி அளவில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அறிந்த வனிதாவின் உறவினர் ரேணுகா என்பவர், இது குறித்து கரூர் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த வனிதாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story