கார் மோதி தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி பலி

செட்டிபாளையம் அருகே உள்ள காசா காலனியில் காரை ரிவர்ஸ் எடுக்கும்போது உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மீது மோதி விபத்து உண்டானதில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, செட்டிபாளையம் அருகே உள்ள காசா காலனி, 1-வது தெருவை சேர்ந்தவர் சங்கரப்பன் மனைவி லட்சுமி வயது 77. இவர் பிப்ரவரி 24ஆம் தேதி மதியம் 12.30 மணி அளவில் அவரது வீட்டின் முன்பாக உறங்கிக் கொண்டிருந்தார் அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் ராகுல் வயது 55 என்பவர் அவரது மாருதி சுசுகி ரிட்ஸ் காரை ரிவேர்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.

ரிவர்ஸ் எடுக்கும் போது காரை வேகமாக எடுத்ததில் உறங்கிக் கொண்டிருந்த லட்சுமி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து லட்சுமி உறவினர் ராமாயி வயது 55 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த லட்சுமி உடலை உடற்கூறு ஆய்வுக்காக, மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக, விபத்து ஏற்படும் வகையில் காரை ஓட்டிய ராகுல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

Tags

Next Story