பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

கோப்பு படம்

பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியானார்.
பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அருகே ஆர்.ஆர்.பாளையம் கிராமத்தில் வசித்தவர் சதீஷ்குமார், 39. கட்டுமான தொழில் செய்து வந்தார். இம்மாதம், 15ம் தேதி, டி.எச்., சாலையில் உள்ள தன் புதிய அலுவலக கட்டடத்தின் மேல் பேனர் வைக்க இடம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த மின் கம்பியில் இருந்து அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story