பொள்ளாச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

பொள்ளாச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கோப்பு படம் 

பொள்ளாச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் உஷா நந்தினி. இவரது கணவர் வீரமுத்து கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்தார்.இதனால் உஷா நந்தினி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தவர் விரக்தியில் மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தீ மளமளவென பற்றிய நிலையில் வலி தாங்க முடியாமல் அலறிய அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உஷா நந்தினியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த உஷா நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நெகமம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story