கரூரில் இளம்பெண் மாயம்: சகோதரர் புகார்

கரூரில் வீட்டிலிருந்து வெளியே சென்ற இளம் பெண் மாயமானதை தொடர்ந்து சகோதரர் புகார் அளித்துள்ளார்.

வீட்டிலிருந்து வெளியே சென்ற இளம் பெண் மாயம். சகோதரியை காணவில்லை சகோதரர் புகார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வடக்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவரது மகள் பூமதி வயது 32.

இவர் கடந்த மே 30ஆம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பூமதி வழக்கமாக செல்லும் இடங்களில் தேடிப் பார்த்தும், அவரது தோழியரிடம் விசாரித்து பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. மேலும், உறவினர் வீட்டிலும் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால், இது குறித்து பூமதியின் சகோதரர் சுரேஷ் காவல் நிலையத்தில் தனது சகோதரியை காணவில்லை என புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான பூமதியை தேடி வருகின்றனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story