கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞன் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞன் கைது

 கத்தியை காட்டி பணம் பறிப்பு 

கரூர் மாவட்டம், தண்ணீர்பந்தல் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் வயது 50. இவர் ஏப்ரல் 25ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த, கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, வாங்கல், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் பெரியசாமி வயது 20 என்ற இளைஞர் சரவணன் இடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பணம் பறித்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சரவணன் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பெரியசாமியை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.

சிறையில் அடைக்கப்பட்ட பெரியசாமி மீது ஏற்கனவே மாயனூர், வாங்கல் பகுதிகளில் மூன்று வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story