கஞ்சாவை பதுக்கிய இளைஞர் கைது

வாங்க பாளையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வாங்க பாளையம் அருகே சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இளைஞர் கைது. 40 கிராம் கஞ்சா பறிமுதல். கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ரூபினிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், ஜூன் 1-ம் தேதி மதியம் 2 மணி அளவில், அருகில் உள்ள வாங்கப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள ஓட்ட பிள்ளையார் கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு பதுக்கி வைத்திருந்த ரூபாய் 400- மதிப்புள்ள 40 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்ததனர். மேலும்,இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, வெங்கமேடு அருகே உள்ள வாங்க பாளையம், எம் கே நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்கிற மோகனசுந்தரம் வயது 23 என்பவர் இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story