ஆத்தூர்: மனைவி பிரிந்த சோகம் - தற்கொலை

ஆத்தூர்: மனைவி பிரிந்த சோகம் - தற்கொலை

கோப்பு படம்

ஆத்தூரில், மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மணிராஜ் வயது 36. இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த 5- வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில், இருவரும் தனித்தனியே வசித்து வந்தனர்.

இதனால், மனவிரக்தியில் வாழ்ந்து வந்த மணிராஜ், மே 24ஆம் தேதி காலை 10 மணி அளவில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த மணிராஜின் தாயார் சுகந்தி வயது 57 என்பவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மணிராஜன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.

Tags

Next Story