இளைஞர் தற்கொலை
![இளைஞர் தற்கொலை இளைஞர் தற்கொலை](https://king24x7.com/h-upload/2024/01/20/366135-image3a1000623391.webp)
மது போதைக்கு அடிமையான இளைஞன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வஞ்சிலியம்மன் கோவில் தெரு, அண்ணாச்சி சந்து பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரகுபதி வயது 26. இவரது மனைவி சருக் ரோஜா வயது 23. ரகுபதி அண்மைக்காலமாக மது போதைக்கு அடிமையாக இருந்தார். மது போதையில் இருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால், விரக்தியடைந்த ரகுபதி, ஜனவரி 18ஆம் தேதி இரவு 11:30 மணி அளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து சருக் ரோஜா கரூர் காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உயிரிழந்த ரகுபதியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கரூர் மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .