காங்கிரஸ் கட்சி ஊழலை கண்டித்து பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

வெங்கமேட்டில் காங்கிரஸ் கட்சியின் ஊழலை கண்டித்து பிஜேபி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை ஆலோசனை பேரில்,கரூர் பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளரும், கரூர் மாவட்ட தலைவருமான செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளருமான முருகானந்தம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சியை சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான பிஜேபி கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story