புகையிலை பொருட்கள் விற்பனை 8 பேர் கைது

புகையிலை  பொருட்கள் விற்பனை  8 பேர் கைது

புகையிலை பொருட்கள்

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த எட்டு பேர் கைது செய்யப்பட்டு இரண்டு கடைகளுக்கு சீல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ,அதிக அளவில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாடுகிறது என கிடைத் தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் போலீசார் இணைந்து மாப்படுகை, சித்தர் காடு ,கூரைநாடு ,அரசு மருத்துவமனை சாலை ,கேணிக்கரை ,சீனிவாசபுரம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை மீண்டும், மீண்டும் விற்பனை செய்வது தெரியவந்தது.

இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கூறைநாடு, கேணிக்கரை, மாப்படுகை உள்ளிட்ட பகுதிமசாலாகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் போன்ற பொருள்களை விற்பனை செய்த 8 பேரை கைது செய்து கடைகளுக்கு 5,000 வீதம் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story