ஆதீனத்தின் ஆபாச வீடியோ வழக்கில் பாஜக அகோரம் மும்பையில் கைது

ஆதீனத்தின் ஆபாச வீடியோ வழக்கில் பாஜக அகோரம் மும்பையில் கைது
கைது செய்யப்பட்டவர்கள் 
தருமபுர ஆதீன விவகாரத்தில் தலைமறைவாக இருந்த மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனகர்த்தர் 27வது சன்னிதானம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலை முயற்சி செய்ததாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் 9 பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செய்யூர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், திருச்சி போட்டோகிராபர் பிரபாகரன் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில், திருக்கடையூர் திமுக விஜயகுமார்

ஆகிய 5 பேரை தனிப்படை அமைத்து மயிலாடுதுறை மாவட்ட போலீசார் தேடிவந்த நிலையில் திருக்கடையூர் விஜயகுமார், தருமபுர ஆதீனத்துடனே இருந்த செந்தில் ஆகிய இருவரும் எந்த தவறும் செய்யவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்த கடிதம் வெளியானது. இந்நிலையில் திருக்கடையூர் விஜயகுமாருக்கு மட்டுமே தான் கடிதம் அளித்ததாகவும் திருக்கடையூர் விஜயகுமார் ஆதீனமடத்திற்கு உதவி செய்ததாகவும் தவறுதலாக அவர் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வழக்கில்

இருந்து திருக்கடையூர் விஜயகுமாரை விருத்தகிரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் குற்றவாளிகளை மயிலாடுதுறை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் பாஜக மாவட்ட தலைவர் அகோரம் முப்பையில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசார் 8பேர் அடங்கிய குழுவினர் மகாராஸ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அலிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி

மயிலாடுதுறைக்கு பாஜக மாவட்ட தலைவர் அகோரத்தை அழைத்து வருகின்றனர். சனிக்கிழமை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story