மயிலாடுதுறை தொகுதியை மீண்டும் பெற காங்கிரஸ் கூட்டத்தில் ஆலோசனை

மயிலாடுதுறை தொகுதியை மீண்டும் பெற காங்கிரஸ் கூட்டத்தில் ஆலோசனை

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டம் 

இந்தியா கூட்டணி தொகுதி பங்கீட்டில் காங்கிரசுக்கு மயிலாடுதுறை தொகுதியை மீண்டும் பெற ஆலோசனை செய்யப்பட்டது

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸ் கட்சி கூட்டணிககட்சியிடமிருந்து பெற வேண்டும் என்ற முனைப்புடன் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் களத்தில் இறங்கி உள்ளனர். மயிலாடுதுறையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் பிரிய குமார் தலைமை தாங்கினார், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜகுமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். மக்களவைத் தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணியில் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இணைந்து இளைஞர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும், இளைஞர்கள் மக்களவைத் தேர்தலில் தீவிரமாக செயலாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினர். மயிலாடுதுறை தொகுதி மீண்டும் காங்கிரஸ் பெற வேண்டும் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.





Tags

Next Story