காசிமட குள சுவர் இடிப்பு - முதல்வருக்கு தருமபுரம் ஆதினம் கோரிக்கை

காசிமட குள சுவர் இடிப்பு - முதல்வருக்கு தருமபுரம் ஆதினம் கோரிக்கை

இடிக்கப்பட்ட காசிமட குள சுவர்

திருப்பனந்தாள் காசிமடத்தின் சுவர் இடிக்கபப்டத்திற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரம் ஆதீனம் 27-வது சன்னிதானம் தமிழக முதல்வருக்கு முகநூல் வழியாக கோரிக்கை விடுத்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது,தமிழக முதல்வர் கவனத்திற்கு, நம் ஆதீன திருக்கோவில் அமைந்த இடத்தையொட்டி, நம் ஆதீன சீடர்மடமாக திகழும், திருப்பனந்தாள் காசிமடத்து குளத்து மதில்சுவரை, இரவு நேரத்தில் உடைத்து சேதபடுத்தியுள்ளனர். இது சைவமத்திடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக, யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய தண்டனையை கொடுக்க வேண்டும், காசிமடத்து முதல்வர் குமரகுருபரர் , நம்ஆதீனத்தின் சார்பில், வடநாட்டில் நடந்த மதக்கலவரத்தை நிறுத்தி, சமய மதநல்லிணக்கம் செய்தவர். நாடுமுழுவதும், அறக்கட்டளை கல்வி சமுதாய பணியாற்றி வருகிறது காசிமடம். இதற்கு தக்கவகையில், தீர்வுகண்டு நீதியையும் அமைதியையும் சமுதாய நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த விரும்புகிறோம். எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story