இஸ்ரேலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

காசா மீது போர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து கரூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர் மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கட்சியின் மாநகர செயலாளர் தண்டபாணி தலைமையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் போர் வெறியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் கோச்சுமின், செயற்குழு உறுப்பினர் ராஜா முகமது, மாவட்ட செயலாளர் ஜோதி பாசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக தங்களது கண்டன கோஷங்களை எழுப்பினர்.


Tags

Next Story