நூதனமாக சூதாடிய கும்பல் - வளைத்து பிடித்த காவல்துறையினர்

நூதனமாக சூதாடிய கும்பல் - வளைத்து பிடித்த காவல்துறையினர்

வாட்ஸ் அப் குழு மூலம் சுதாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கைது

வாட்ஸ்-ஆப் குழு அமைத்து மாவட்டமாக சென்று சூதாடிய 14 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அஞ்சார்வாரத்தலை என்ற கிராமத்தில் தனியார் திருமண கூடம் ஒன்றை வாடகைக்கு பிடித்து பணம் வைத்து சீட்டு கட்டு விளையாடிய நபர்களை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் மற்றும் குத்தாலம் போலீசார் வளைத்து பிடித்து 14 பேர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5.15 லட்சம் ரொக்கம், 3 கார்கள் மற்றும் 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடிய சிலரை தேடி வருகின்றனர். வாட்ஸ் அப் குழு ஒன்றை அமைத்து அதில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாவட்டத்தில் சூதாட்ட குழுவினர் சீட்டு கட்டு விளையாட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story