மனைவியை குற்றம்சாட்டி போலீசில் புகார் அளித்த நடிகர் ஜெயம்ரவி !!

Update: 2024-09-25 05:00 GMT

 ஜெயம் ரவி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் அதை பற்றி வந்து கொண்டிருந்த நிலையில் விவாகரத்துக்கு காரணம் ஒரு பாடகி என ஒரு தகவல் வெளியானதை அடுத்து, அது உண்மை இல்லை என ஜெயம் ரவி தெரிவித்து இருந்தார்.

மேலும் மனைவி ஆர்த்திக்கு விவாகரத்து நோட்டீஸ் ஏற்கனவே அனுப்பி இருந்த நிலையில் அது அவருக்கு நன்றாகவே தெரியும். எதுவுமே தெரியாது என ஆர்த்தி கூறுவது பொய் எனவும் ஜெயம் ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது ஜெயம் ரவி சென்னை அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.

சென்னை ECR ரோட்டில் இருக்கும் ஆர்த்தியின் வீட்டில் இருந்து தான் வெளியே வந்துவிட்ட நிலையில், தன்னுடைய உடமைகளை மீட்டு தரும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News