எனக்கு படம் இயக்க ஆர்வம் இருக்கிறது - விரைவில் டைரக்ட் செய்வேன் என நடிகர் விஜய் சேதுபதி !!!

Update: 2024-06-10 06:52 GMT

விஜய் சேதுபதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விஜய் சேதுபதி தற்போது நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர். படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் சில நாட்களுக்கு முன் துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் மகாராஜா திரைப்படத்தின் போஸ்டர் திரையிடப்பட்டது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளும் வெளியாக உள்ளது.

நேற்று ஹைதராபாத்தில் உள்ள அபர்ணா மாலில் ப்ரமோஷன் பணிகளில் பட குழுவினர் கலந்து கொண்டனர். அதில் விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் மகாராஜா எனது 50ஆவது படமாக அமைந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி சினிமாவில் எல்லோரிடமும் இருந்தும் ஒவ்வொரு விஷயத்தை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். விமர்சனம், பாராட்டுகளை சமமாகவே பார்க்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் துபாயில் வேலை பார்ப்பேன்.

புர்ஜ் கலிபாவில் எனது படத்தின் போஸ்டர் வந்தபோது ஜெயிக்க வேண்டும் என்று துபாய் தெருக்களில் சுற்றியது தான் நினைவுக்கு வந்தது. பிறகும் ஒரு நடிகனாக எனக்கு ஒரு நிறைவு ஏற்படவில்லை. மக்கள் செல்வன் என்று அழைக்கும் போது கேட்க நன்றாக இருக்கிறது. 50 படங்களில் நடித்து விட்டேன் பல படங்களுக்கு எனக்கு முழுமையான சம்பளம் இன்னும் வரவில்லை.

காசோலை கூட பணமின்றி திரும்பி வந்து இருக்கிறது. ஆனாலும் தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவதை நான் வரவேற்கிறேன். எனக்கு படம் இயக்க ஆர்வம் இருக்கிறது விரைவில் படம் டைரக்ட் செய்வேன். ரசிகர்கள் தொலைவில் இருந்து வர வேண்டி இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நான் ரசிகர்கள் சந்திப்பு நடத்துவது இல்லை என்றார்.

Tags:    

Similar News