மாஸ் ரி- என்ட்ரி கொடுத்த சாச்சனா - அதிர்ச்சியில் போட்டியாளர்கள் !!

Update: 2024-10-11 04:50 GMT

சாச்சனா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

வாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் என்ற கோணத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் 8 கடந்த வாரம் துவங்கிய நிலையில், முதல் Evition நடக்கும் என பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும், 18 பேரில் யார் வெளியேற போகிறார் என குழப்பத்தில் இருந்தனர். அதில் சாச்சனா வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

24 மணி நேரத்திற்குள் எப்படி ஒருவரை வெளியேற்றலாம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் 8ல் 5வது நாளான இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த முதல் ப்ரோமோவில், 24 மணி நேரத்திற்குள் வெளியேறிய போட்டியாளர் சாச்சனா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். மறைமுகமாக யாருக்கும் தெரியாமக் சாச்சனா என்டரி கொடுக்கிறார். அவர் யாருக்கும் தெரியாமல் பெட் ரூமுக்குள் சென்று கேஷுவலாக அமர்ந்திருக்கிறார்.

அவரை முதலில் விஷால் பார்த்து ஷாக் ஆகிறார். ஏய் இங்க பாரு என விஷால் சொல்ல அனைவரும் வந்து பார்த்து சாச்சனாவை கட்டி அணைத்து வரவேற்கிறார்கள். பின்னர் சாச்சனா அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் நான் வெளியில் அனைத்தையும் பார்த்தேன்.

அதன்படி லீஸ்ட் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர் என்றால் அது ரஞ்சித் சார், சத்யா அண்ணா, விஷால் அண்ணா என்ன சொல்கிறார். இந்த மூவரில் எனக்கு மிகவும் லீஸ்ட் கண்டெண்ட் ஆக இருக்கும் நபர் என்றால் என கூறுகிறார்

இதனால் வீட்டிற்குள் இருந்த அனைவரும் ஆடிப்போயுள்ளனர். என்னடா இது இப்படியொரு ட்விஸ்ட்டா என்பது போல் பிக் பாஸ் 8ல் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

Tags:    

Similar News