வெற்றிக் கொள்கை திருவிழாவிற்கு மூன்றாவது கடிதம் எழுதிய தவேக தலைவர் !!

Update: 2024-10-25 06:01 GMT

தவேக தலைவர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொண்டர்களுக்கு தலைவர் விஜய் மூன்றாவது கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த மாநாட்டை தவெக கொள்கை மற்றும் கட்சியின் இலக்கை அடையும் அரசியல் திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த மாநாட்டின் மீது விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமுன்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் பார்வையும் திரும்பி உள்ளது.

இதற்காக 27 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமனம் செய்து மாநாட்டு பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தவெக மாநாட்டில் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் மாநாடு நெருங்கிவிட்ட வேளையில் தலைவர் விஜய், தொண்டர்களுக்கு மூன்றாவது கடிதத்தை எழுதியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, ""நம் கழகத்தின் முதல் மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழாவிற்கு எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு நிகழப்போகும் தருணம் நம் மனம் மற்றும் கள வளாகத்திற்கு வெகு அருகில் வந்துவிட்டது.

உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள் நம்மிடையே இருக்கும் அன்பின் கணத்தை இன்னும் பல மடங்கு கூட்டப் போகின்றன.

அதை வார்த்தைகளில் எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. உச்சத்தில் அரசு ஒழுங்கோடு உலகமே உற்று நோக்கி போற்றும் வகையில் கொண்டாடுவோம்.

நம் வெற்றிக் கொள்கை திருவிழாவை கொண்டாடுவதற்காக பெருந்திரளாக அனைவரும் மாநாட்டுக்கு வரும் பொழுது பாதுகாப்பையும் கட்டுப்பாடையும் மனதில் வைத்து பத்திரமாக வாருங்கள் என்றும், நம் கழகக் கொடியை கைகளிலும் மனங்களிலும் ஏந்தி வாருங்கள்.

உங்கள் வருகைக்காக வி.சாலை எல்லையில் என் இரு கரங்களின் விரித்தபடி இதய வாசலைத் திறந்து வைத்து காத்திருப்பேன் எனவும்,

வாருங்கள் மாநாட்டில் கூடுவோம்.

நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளை செயல்படுத்தி உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்' என்று தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News