நடிகர் நாக சைதன்யா ,சோபிதா துலிபாலாவின் திருமண ஒளிபரப்பை நெட்பிளக்ஸ் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் !!

Update: 2024-11-26 11:45 GMT
நடிகர் நாக சைதன்யா ,சோபிதா துலிபாலாவின் திருமண ஒளிபரப்பை நெட்பிளக்ஸ் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் !!

நடிகர் நாக சைதன்யா

  • whatsapp icon

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவருடைய மூத்த மகன் நாக சைதன்யா. இவர் 2009-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'ஜோஷ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இன்று தெலுங்கு திரையுலங்கில் முக்கிய பிரபலமான நாகசைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 4 ஆண்டுகள் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த திருமணம் சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரம்பரிய முறைப்படி இந்த திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்தில் நெருங்கியவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என தெரிவித்துள்ளார்கள். இதனிடையே நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்பிளக்ஸ் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண ஒளிபரப்பை வாங்கிய நெட்பிளக்ஸ் கடந்த 18-ந்தேதி அன்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News