ஜிகர்தண்டா 2 எனது கேரியர் பெஸ்ட் - இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

Update: 2023-11-17 03:39 GMT

ஜிகர்தண்டா 2 இயக்குனர் சுப்புராஜ் செய்தியாளர் சந்திப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை:புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள திரையரங்கில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா,ராகவா லாரன்ஸ் ஆகியோர் ரசிகர்களை சந்தித்து உரையாடினர்.இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ் ,ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நன்றாக போய் கொண்டுள்ளது. ரொம்ப சந்தோஷம்.இது எனது முக்கியமான காலகட்டத்தின் படம். இந்தப் படம் வருவதற்கு முன்பு பதட்டமாக இருந்தது, தற்போது கிடைக்கும் வரவேற்பு உற்சாகம் அளிக்கிறது. ஜிகர்தண்டா 1 பலருக்கு பிடித்த படமாக இருந்தது.அதைவிட பெஸ்ட் தர வேண்டும் என நினைத்தேன், நான் இயக்கிய படங்களில் இது தான் எனது பெஸ்ட். ஜிகர்தண்டா 1 முடித்த போது ஜிகர்தண்டா 2 பண்ணும் எண்ணம் இல்லை, இந்தப் படம் வர ராகவா லாரன்ஸ் தான் காரணம். ஜிகர்தண்டா 3 வது பார்ட் எடுப்பதற்கான சின்ன எண்ணம் உள்ளது.அதை உடனே பண்ணாமல் சில ஆண்டுகள் கழித்து பண்ண நினைக்கிறேன். எல்ஜியூ என்பது எனக்கு பிடித்த விஷயம், அது செம ஐடியா என லோகேஷ் கனகராஜிடம் கூறினேன்.நான் ஒரே மாதிரி படங்கள் அடுத்தடுத்து பண்ணமாட்டேன். வேறு வேறு களங்களில் படம் பண்ண நினைக்கிறேன். டெலிகிராமில் படம் வந்தால் திரையரங்குகளுக்கு மக்கள் செல்வதில்லை என்ற 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரசிகர்களின் மனநிலை தற்போது இல்லை, ரசிகர்கள் திரையரங்குகளில் படம் பார்க்க விரும்புவதாக கூறினார்.ஒரு படத்தின் கலெக்சன் என்பது முழுக்க தயாரிப்பாளர் சார்ந்த விஷயம் நடிகர்கள் ரசிகர்களுக்கு அது தேவையில்லாத விஷயம். இந்த படத்திற்கு குறைந்த அளவிலான எதிர்மறை விமர்சனம் தான் வந்தது. அடுத்த படம் குறித்து தற்போது யோசிக்கவில்லை. யானைகளுக்கு மனிதன் அளவு உணர்ச்சிகள் இருக்கும்.அவைகளுக்கு பழி,மன்னிக்கும் தன்மை இருக்கும் என படித்ததை படத்தில் வைத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News