கார்த்திகை தீபம் அப்டேட் !!

Update: 2024-05-30 09:00 GMT

கார்த்திகை தீபம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா தன்னை ஒருவன் கத்தியால் குத்த விஷயத்தை சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஐஸ்வர்யாவுக்கு போன் செய்யும் ஆனந்த் - அதாவது, கார்த்திக் தீபா சொன்னதை கேட்டு இதெல்லாம் ஐஸ்வர்யா வேலையாக தான் இருக்கும் என்ற முடிவுக்கு வருகிறான், உடனே ஆபிஸ்க்கு கிளம்பி வந்து ஆனந்திடம் ஐஸ்வர்யா அண்ணி இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க என்று சொல்ல அவனும் ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு நீங்க ஏதாவது பண்ணீங்களா என்று கேட்க இல்லை என்று சொல்கிறாள்.

தீபாவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் அபிராமி - அடுத்து தீபா கை உடைந்து சாப்பிட முடியாமல் ரூமுக்குள் இருக்க அங்கு வந்த அபிராமி தீபாவை நலம் விசாரித்து அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட இருக்கும் இடையேயான மாமியார் மருமகள் பிணைப்பு அதிகமாகிறது.

அடுத்து ரம்யா ஆபிஸ் காட்டப்படுகிறது. இந்த ஆபிஸ் சுவரில் யாரோ கார்த்திக் லவ் ஸ்டோரி என்று எழுதி இருக்க இதை பார்த்து எல்லாரும் ஷாக் ஆகின்றனர், ஆபிஸ் வந்த ரம்யா இதை பார்த்து பயங்கர கோபமாகி யார் எழுதியது என்று எல்லாரையும் அதட்டி கேள்வி கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Tags:    

Similar News