கேரள நிலச்சரிவு ; நிவாரண நிதி வழங்கிய சினிமா பிரபலங்கள் !!

Update: 2024-08-01 11:30 GMT

கேரளா

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கனமழை காரணமாக அடுத்தடுத்த நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரைக்கும் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் நிலையில் சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரள நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கான நிவாரண நிதிக்கு நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் ரூபாய் 50 லட்சம் வழங்கி உள்ளார்கள். நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News