மணிமேகலை vs பிரியங்கா பிரச்சனை : இது தான் கர்மா என அனிதாசம்பத் போட்ட கருத்து !!

Update: 2024-09-16 05:31 GMT

மணிமேகலை vs பிரியங்கா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை, சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில், தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக விளங்குகிறது, குக் வித் கோமாளி. 2020ஆம் ஆண்டில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி, தற்போது 5வது சீசனை எட்டியிருக்கிறது. எப்போதும் போல அல்லாமல், இந்த முறை இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் இடம் பெற்றிருந்தன.

போட்டியாளராக வந்திருக்கும் VJ பிரியங்கா தலையீடு அதிகமாக இருக்கிறது. புகார் அளித்தால் என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சுயமரியாதை முக்கியம் என விலகி விட்டேன் என மணிமேகலை கூறி இருக்கிறார்.

இந்நிலையில் இது தான் கர்மா என அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார்.

யார் அடுத்தவரை கீழே போட்டு மிதிக்க நினைக்கிறாரோ, அவர் அதே போன்ற இன்னொருவரால் செருப்படி வாங்குவார் என அனிதா சம்பத் கூறி உள்ளார்.

தான் பாதிக்கப்பட்டு இருப்பதை தான் அனிதா சம்பத் இப்படி கூறி இருக்கிறார். ஆனால் அவர் பிரியங்காவை தாக்குகிறாரா அல்லது மணிமேகலையை சொல்கிறாரா என வெளிப்படையாக சொல்லவில்லை. அதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருகின்றனர்.

மேலும் மணிமேகலை ஷோவில் இருந்து விலகுவதாக நேற்று போட்ட பதிவில், "Guts all the best mani" என அனிதா சம்பத் கமெண்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News