ரம்யா ஆபிஸில் ஐடி ரெய்டில் சிக்கிய பணம் - கார்த்திகை தீபம் சீரியல் திருப்பம் !!

Update: 2024-06-03 06:50 GMT

 கார்த்திகை தீபம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமானா சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி கொண்டு வந்த ஜூஸில் ரம்யா மாத்திரையை கலந்து தீபாவுக்கு கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, தீபா ஜூஸ் குடித்த கொஞ்ச நேரத்தில் பொருட்கள் எல்லாவற்றையும் தள்ளி விட்டு சைக்கோ போல் நடந்து கொண்டு மயக்கம் போட்டு விழுகிறாள், உடனே கார்த்திக்கு இந்த விஷயத்தை சொல்ல அவன் ஆபிசில் ரம்யாவிடம் பெர்மிஷன் கேட்டு வீட்டிற்கு வருகிறான்.

பிறகு தீபாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல டாக்டர் பயப்படுற மாதிரி எதுவும் இல்ல, டிப்ரெஷனால் இப்படி ஆகி இருக்கும் என்று சொல்லி அனுப்ப மீனாட்சி எதையோ கேட்க வர, கார்த்திக் எதுவாக இருந்தாலும் வீட்டிற்க்கு போய் பேசி கொள்ளலாம் அண்ணி என்று வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

பிறகு தீபாவிடம் என்னாச்சு என்று கேட்க, அவள் அத்தை ஜூஸ் குடுத்தாங்க, அதை குடிச்ச பிறகு தான் இப்படி ஆச்சு என்று சொல்ல, தீபா குடித்து வைத்த ஜூஸ் டம்பளரை எடுத்து கொண்டு கிளம்புகிறான், அடுத்த நாள் ரம்யா ஆபிஸ்க்கு அவளை பார்ப்பதற்காக தோழி ஒருவர் வருகிறார், ரம்யா இல்லாத நிலையில் அவளுக்கு போன் செய்து கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்திருப்பதாக சொல்கிறார்.

வீட்டு முகவரியும் தெரியாது என்பதால் ஆபிஸிலேயே அம்மு என்று பெயர் எழுதி பி.ஏ-விடம் கொடுக்க ரம்யா அதை தனது கேபினில் வைக்க சொல்கிறாள்.பிறகு கார்த்திக்கு அம்மு என்ற பெயர் தெரிய கூடாது என்று பதறியடித்து ஆபிஸ் ஓடி வருகிறாள்.

இங்கு கார்த்திக் ரம்யா ரூமுக்குள் செல்ல கல்யாண பத்திரிகையை பார்த்து விடுவானோ என்ற பில்டப் எகிற அதற்குள் ரம்யா வந்து அந்த பத்திரிகையை மறைத்து விடுகிறாள். அடுத்து ரம்யா கம்பெனிக்கு ஐ.டி ரைடு வருகின்றனர்.

கணக்கில் காட்டாத பணம் இருப்பதாக சொல்லி எடுத்து செல்ல, ரம்யா யார் இப்படி பண்ணது என்று சத்தம் போட, ஒருவன் கார்த்திக் தான் ஐ.டி இது அதுனு போன்ல பேசி கொண்டிருந்ததாக சொல்ல, ரம்யா அவர் இப்படி பண்ணி இருக்க மாட்டாரு என்று ரம்யா சப்போர்ட் செய்து பேசுகிறாள்.

பிறகு அந்த நபர் கார்த்திக்கு தெரிவது போல் ஆனந்துக்கு போன் செய்து நீங்க சொன்ன மாதிரியே செய்துட்டேன் என்று சொல்லி பேச, கார்த்திக் ஆனந்த் தான் இப்படி செய்ய சொன்னதாக புரிந்து கொண்டு அவனிடம் கேட்க, அவன் நான் எதுவும் பண்ணல என்று சொல்கிறான்.

பிறகு ரம்யா கார்த்தியை கூப்பிட்டு கம்பெனி விஷயமா பெங்களூர் போறேன், நீங்களுடம் கூட வாங்க என்று சொல்லி கூப்பிட, கார்த்திக்கும் ஓகே சொல்ல பி.ஏ-விடம் ரெண்டு பேருக்கும் டிக்கெட் போட சொல்கிறாள்.

இந்த விஷயம் அறிந்த மாணிக்கம் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்கோ.. அப்புறம் இந்த கம்பெனியோட அடுத்த ஓனர் நீ தான் என்று சொல்ல, கார்த்திக் தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ள கார்த்திகை தீபம் சீரியல் பாருங்க.


Tags:    

Similar News