திருவண்ணாமலை கோவிலில் சாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் இளையராஜா !!
By : King 24x7 Angel
Update: 2024-06-06 04:55 GMT

இளையராஜா
இன்று வைகாசி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா இன்று அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து, கோவிலின் அறங்காவலர் குழு சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினர்.